திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களில் நடனம் ஆடுவதன் மூலம் பிரபலமானவர் சன்னி லியோன். இவர் தமிழில் வடகறி திரைப்படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி இருப்பார். அதனை தொடர்ந்து ‘தி இவன்’, ‘ஓ மை கோஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சன்னி லியோன் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

அதில் “ஒவ்வொரு நடிகருக்குமே தான் நடிக்கும் படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுமா என்ற பயம் இருக்கத்தான் செய்யும். எல்லோருமே வெற்றி பெற வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் நாம் எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்து விடாது. அதற்காக நடந்ததைப் பற்றிய சிந்தித்துக் கொண்டிருக்காமல் தவறுகளை சரி செய்து கொண்டு முன்னேற வேண்டும்.

ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு மணி நேரமும் மாறிக்கொண்டே தான் இருக்கும். இப்போது எனது மிகப் பெரிய லட்சியம் என்றால் அது நான் விரும்பியதை விரும்பியபடி தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான். மக்கள் என்னை தடைகளை உடைத்த கடின உழைப்பாளி என்று நினைவு கூற வேண்டும் என்பது எனது விருப்பம்” என பேசியுள்ளார்.