இந்தோனேசியாவின் லொம்பாக் தீவில் அமைந்துள்ள ரிஞானி எரிமலையை சுற்றி பயணித்தபோது பிரேசிலை சேர்ந்த 26 வயதான ஜுலியானா மரின்ஸ் எனும் இளம்பெண் தவறி கீழே விழுந்ததால் உயிரிழந்தார்.

பத்திரிகையாளர் பணியாற்றி வந்த ஜுலியானா, நண்பர்களுடன் சனிக்கிழமை காலை சுமார் 12,224 அடி உயரம் கொண்ட இந்த புகழ்பெற்ற எரிமலையின் உச்சிக்குச் சென்று கொண்டிருந்தபோது சுமார் 490 அடி உயரமுள்ள மலை சரிவில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுந்ததற்குப் பிறகு சிறிது நேரம் உயிருடன் இருந்ததாக டிரோன் காட்சிகள் மூலம் தெரியவந்தது. கூடுதலாக, அருகிலிருந்தவர்கள் “உதவி கேட்கும் சத்தம்” கேட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால் பனிமூட்டம், இயற்கை தடைகள் மற்றும் கோளாறான காணுபடும் சூழ்நிலை காரணமாக மீட்பு பணிகள் தாமதமானது.

மிகவும் மென்மையான மணல்களில் சிக்கிக் கொண்டதால் கயிறுகளால் இழுத்து மீட்பதற்கு கூட சிரமம் ஏற்பட்டது என மீட்புப் பிரிவு தலைவர் முகம்மது ஹரியாடி தெரிவித்தார். முன்னதாகக் விழுந்த இடத்தில் அவர் இல்லாத  நிலையில், அடுத்த நாள் டிரோன் காட்சியில் வேறு இடத்தில் அவர் கிடந்தது கண்டறியப்பட்டது.

பின்னர் செவ்வாய்க்கிழமை அவர் சடலமாக மீட்கப்பட்டதை இந்தியோனேசிய தேடல் மற்றும் மீட்பு முகமை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த தகவலை ப்ரசிலிய அரசு மற்றும் ஜுலியானா மரின்ஸ் குடும்பத்தினர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

“மிகுந்த வேதனையுடன் நாங்கள் தெரிவிக்கிறோம், ஜுலியானா உயிருடன் மீட்கப்படவில்லை…” என குடும்பத்தின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். கடந்த மாதமும் மலேசியா சுற்றுலாப் பயணியொருவரும் இதே எரிமலையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.