
திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் திறக்கப்பட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று வரவேற்ற காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு பதிவின் மூலம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட தாமதத்தையும், அதையெல்லாம் மீறி தனது தொகுதியில் பிரதமரை நேரத்திற்கு வரவேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “செயல்படாத விமான நிலையத்திலும் தாமதம் ஏற்பட்டதுடன், எனது தொகுதியில் பிரதமரை வரவேற்க நேரமாய் வந்தேன்” என அவர் X தளத்தில் பதிவு செய்திருந்தார்.

விழா மேடையில் பிரதமர் மோடி, தனது உரையின்போது சசி தரூர் தன்னை வரவேற்றத்தால் “இன்றைய நிகழ்ச்சி சிலரின் தூக்கத்தைக் கெடுக்கும்” என கூறினார். அதாவது இந்தியா கூட்டணியில் இருக்கும் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சசிதருர் ஆகியோர் தன்னை சிறப்பாக வரவேற்றதாக கூறிய பிரதமர் மோடி இவர்கள் என்னுடன் மேடையில் இருப்பதால் சிலரின் தூக்கம் கெட்டுவிடும் என்று காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக தாக்கி பேசினார். மேலும் இன்றைய நிகழ்வு கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!