நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகரமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் ஈசன் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தது, இந்த படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், விஷ்ணு விஷால் ஆகியோரும் நடித்தார்கள். இந்த பட தயாரிப்பதற்காக தன பாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து 3, 74,75,000 பணத்தை துஷ்யந்த் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை வருடத்திற்கு 30% வட்டியோடு திருப்பிக் கொடுக்கவும் உறுதியளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடன் தொகை திருப்பிக் கொடுக்காததால் வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து இரு தரப்போடும் பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதி கடன் தொகை வட்டியோடு சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரத்தை வசூலிக்கும் விதமாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தன பாக்கியம் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த படத்தை விற்பனை செய்து கடனை ஈடு கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஆனால் இந்த உத்தரவின் படி அனைத்து உரிமைகளையும் வழங்காததையாடுத்து ராம்குமாரின் தந்தை சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட உத்தரவு கோரி தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில்

 

சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கின்  விசாரணையில், ராம்குமார் உங்கள் சகோதரர் தானே இப்போது அந்த கடன்களை நீங்கள் அடைத்துவிட்டு அவரிடம் பின்னர் பெற்றுக் கொள்ளலாமே என்று பிரபு விடம் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த பிரபு என் வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியதில்லை. சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்காக என்னுடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. நிறைய பேரிடம் அவர் கடன் வாங்கி உள்ளதால். நான் உதவ முடியாது என்று பிரபு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.