ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள சிட்னி, மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகரங்களில் வருகிற 27ஆம் தேதி ராவண வதம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், என் பாட்டன் ராவணனை அவமானப்படுத்துவது உலக தமிழனை அவமானப்படுத்துவது போன்றது.

இதனை தமிழ் இனம் ஒருபோதும் வேடிக்கை பார்க்காது. எனவே அந்த ராவண வதம் நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் ராவணனுக்கு நாங்கள் உலகெங்கும் பெருவிழா எடுக்கப் போகிறோம் என்று பதிவிடப்பட்டுள்ளது.