உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு காவலர், ஒரு பெண்ணை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் காமிராவில் பதிவாகி, வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. அந்தப் பெண் ஒரு கோயிலுக்கு சென்றிருந்தபோது, வாகனம் நிறுத்துவது தொடர்பாக காவலருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
प्रतापगढ़-महिला को सिपाही शिवम ने मारा थप्पड़, दर्शन करने आई महिला को मारा थप्पड़
महिला का फोन छीनकर जमीन पर पटका, नो पार्किंग जोन में गाड़ी खड़ी होने पर विवाद
मोबाइल तोड़ने पर महिला ने पकड़ा था कॉलर, वीडियो को संज्ञान में लेकर पुलिस जांच में जुटी, कुंडा थाना के मनगढ़ धाम के… pic.twitter.com/xly826bZSE
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) October 25, 2025
வைரலான வீடியோவில், சிவம் என்ற காவலர் அந்தப் பெண்ணை இரண்டு முறை அறைவது தெரிகிறது. மேலும், அவர் பெண்ணின் கைபேசியை தரையில் வீசினார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அப்பகுதி மக்கள் அங்கு கூடினர். வாக்குவாதம் தீவிரமடைய, காவலர் முதலில் பெண்ணின் கைபேசியை தரையில் எறிந்தார். பின்னர், அந்தப் பெண் காவலரின் சட்டையை காலரைப் பிடித்தார். உடனே, காவலர் அவரை அறைந்தார்.
