ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேரி பகுதியில் நிராஜலா ஏகாதிசியின் போது வாஷிங்மெஷினில் பைனாப்பிள் ஷேக் செய்த சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அங்கு கூட்டமாக நின்று சிலர் வாஷிங்மெஷினில் பைனாப்பிள் ஷேக் செய்கின்றனர்.

பின்னர் ஒருவர் கையில் ஒரு மிஷினை வைத்து அதில் நன்றாக கலக்குகிறார். பொதுவாக வாஷிங்மெஷினை துணி துவைப்பதற்காக பயன்படுத்தும் நிலையில் அதில் இப்படி பைனாப்பிள் ஷேக் செய்து சுகாதார மற்ற முறையில் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.