
சோசியல் மீடியாவில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகும். ஒரு வீடியோவில் மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணம் செய்தனர். அப்போது ஒரு வாலிபர் அருகே நின்ற மற்றொரு பயனியின் செல்போனை திருட முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணி அந்த வாலிபரை பிடித்து விசாரிக்கிறார். ஆனால் அந்த வாலிபர் தான் தவறு செய்யவில்லை என மறுத்து பேசியதால் கோபமடைந்த பயணிகள் சுற்றி வளைத்து அந்த வாலிபரை சரமாரியாக அடித்துள்ளனர்.
@gharkekalesh pic.twitter.com/F9HEFFt6bi
— Arhant Shelby (@Arhantt_pvt) June 16, 2025
மேலும் மெட்ரோவில் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் அதிரடியாக அந்த இடத்திற்கு வந்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.