நீயா நானா” நிகழ்ச்சியில் சமீபத்தில் நடைபெற்ற “உணவு கட்டுப்பாடுகள் மூலம் உடல் பருமன் குறைக்கும் நபர்கள்” என்ற தலைப்பில் நடந்த விவாதம், பார்வையாளர்களிடையே பெரும் கவனம் பெற்றது.

இதில், ஒருவரது அனுபவம் நிகழ்ச்சியின் மிக முக்கியமான தருணமாக அமைந்தது. உடல் எடையை குறைப்பதில் பாரம்பரிய உணவுகள் எப்படி துணைபுரிந்தன என்பதைக் கூறியபோது, சிலர் சிரித்தனர். ஆனால், “ஆறு மாதங்களுக்கு முன்பு நான் எப்படி இருந்தேன் என்பதை பார்த்தால் இப்படி சிரிக்க மாட்டீர்கள்” என கர்வத்துடன் கூறிய அவர், தனது பழைய புகைப்படத்தை காண்பித்ததும் அனைவரும் வியப்பில் மூழ்கினர் – 96 கிலோ எடையுடன் மிகவும் பருமனாக இருந்த அவரை, நிகழ்ச்சியில் பார்ப்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற பாரம்பரிய தானியங்களை தினசரி உணவாக உட்கொண்டு, தனக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், உடல் எடையைக் கட்டுப்படுத்தும் சக்தியையும் பெற முடிந்தது என அவர் பகிர்ந்தார். இன்று பலர் அதிக விலையுள்ள, செயற்கை புரதப்பொடி, டயட் பிளான் போன்றவற்றைத் தேடி அலைகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Karthik Mc (@neeya_naana__cuts)

“>

ஆனால், நம் முன்னோர்கள் உட்கொண்ட இயற்கை உணவுகளே நம் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைக்க கூடியவை என்பதை அந்த நபர் நேரில் நிரூபித்துள்ளார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்த நெட்டிசன்கள், “இது உண்மையான இன்ஸ்பிரேஷன்” எனக் கூறி, பாரம்பரிய உணவுகளின் மாபெரும் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துக் காட்டிய அந்த நபருக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.