பொதுவாக சின்ன குழந்தைகள் ஏதாவது ரசிக்கும் வகையில் செய்தால் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். கள்ளம் கபடம் இல்லாத அந்த மனது மற்றவர்கள் காட்டும் அன்பிற்காக சில பெரிய பெரிய விஷயங்களை செய்வார்கள். அந்த வகையில் தற்போது வெளியான வீடியோவில் சிறுமி ஒருவர் ஐஸ்க்ரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். கடைக்காரர்கள்  ஐஸ்கிரீம் தராமல் குழந்தையிடம் விளையாட்டு காட்டினார்.

இதனால் கடுப்பான கடுப்பான குழந்தை ஒரு கட்டத்திற்கு மேல் ஆட ஆரம்பித்து விட்டார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அனைவரும் குழந்தை ஆடுவதை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். குழந்தையின் ஆட்டத்தை பார்த்து கடைக்காரரும்  கடையை விட்டு வெளியே வந்து ஆட ஆரம்பித்து விட்டார்.  பின்னர் கடைக்காரர் குழந்தையிடம் ஐஸ்க்ரீமை கொடுத்து விட்டார். இந்த விடியோவை பார்த்த இணையவாசிகள் என்னவொரு புத்திசாலித்தனம் என்று பாராட்டி வருகிறார்கள்.