வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அமைச்சரும், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பியும் ஆந்திரா எல்லையோரம் இருக்கும் கிறிஸ்டியன் பேட்டையில் கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு மற்றும் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று சோதனை நடத்தினர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் 11 கோடி ரூபாய் பணம் சிக்கிய வழக்கில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் அவசர அவசரமாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.  இது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.