
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இதுபோன்று கூட நடக்குமா என்று கேட்கும் விதத்தில் அமைந்துள்ளது. அதாவது ஒரு பெண் வாஷிங்மெஷினுக்குள் எப்படியோ நுழைந்துவிட்டார். அவர் எதற்காக வாஷிங்மெஷினில் நுழைந்தார் என்ற காரணம் தெரிய வராத நிலையில் அவரால் பின்னர் வெளியே வரவே முடியவில்லை. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணை மீட்க முயற்சி செய்தனர்.
அந்தப் பெண்ணை பல கட்டங்களாக முயற்சி செய்து அவர்கள் மீட்க முயற்சி செய்த நிலையில் இறுதியில் அந்த பெண்ணை முழுவதுமாக வாஷிங் மெஷினில் தள்ளி அவரது காலில் ஒரு துணியை கட்டி பின்னர் மெதுவாக வெளியே இழுத்தனர். மேலும் இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சமூக வலைதளப் புகழுக்காக இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியதாக மாறியுள்ளது.
Yurtdışında çamaşır makinesine girip mahsur kalan kadını olay yerine gelen itfaiye ekipleri kurtardı.pic.twitter.com/w4H2S4Vmgt
— BTG (@btgsondakika) June 10, 2025