
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை அருகே நல்லூர் பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பலகை சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வரவேற்பு பலகையில் ஜாதி, மதம், இனம், மொழி, போட்டி, பொறாமை, பழி, கோபம், பகை இவை அனைத்தும் மறந்து ஒரு உண்மையான மனிதனாக உள்ளே நுழையவும். நல்லூர்பட்டி உங்களை அன்புடன் வரவேற்கிறது என அந்த வரவேற்பு பலகையில் எழுதப்பட்டுள்ளது. அது தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.