
பிரபல தொழிலதிபரான ரத்தம் டாடா கடந்த அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி உடல்நல குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ரத்தன் டாடா பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நான் நான் ஒரு முறை ரத்தன் டாடாவுடன் லண்டனுக்கு விமானத்தில் பயணித்தேன். இருவரும் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கிவிட்டோம்.
அப்போது அவரது ஊழியர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை அழைக்க போன் பூத்திற்கு சென்றார். அப்போது அவரிடம் பணம் இல்லை. அந்த சமயத்தில் என்னிடம் வந்து அமிதாப் நான் உங்களிடம் கொஞ்சம் கடன் வாங்கலாமா? போன் செய்ய என்னிடம் பணம் இல்லை என கூறினார். அதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரது வேண்டுகோளைக் கேட்டு நானே வியந்து போனேன் என்னிடம் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தேன். என அமிதாப் கூறியுள்ளார்.
View this post on Instagram