ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் போலீசாரது விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ள சோனம் ரகுவன்ஷி மற்றும் அவரது காதலர் ராஜ் குஷ்வாஹா ஆகிய இருவரும் போலீசார் முன் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.

மேகாலயா போலீசார் இருவரையும் நேரில் அமர்த்தி விசாரணை நடத்திய போது, இருவரும் ஒருவர்மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதில் சோனம், “ராஜ் என் கணவரை கொலை செய்ய சதி செய்தான்” என்று கூறியதுடன், ராஜ், “சோனமும் இந்த சதியில் சம பங்கேற்பாளர்” என்று வலியுறுத்தினார்.

திருமணமாகி சில நாட்களுக்குள் ராஜாவை கொல்லும் திட்டம் வகுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சதியில் ராஜாவின் மூன்று நண்பர்களும் ஈடுபட்டிருந்தனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. போலீசாரின் தெரிவிப்புப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறதாலும், சோனமும் ராஜும் விசாரணையின் போது மிகுந்த பதற்றத்துடன், ஒருவருக்கொருவர் ஏக்கத்துடன் பழி சுமத்திக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதேநேரத்தில், அனைத்து குற்றவாளிகளும் ‘ஒப்பந்தக் கொலை’ என்ற குற்றச்சாட்டை மறுக்கின்றனர். இந்த வழக்கு சமூகத்தினுள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உண்மையான காரணம் மற்றும் பின்னணி குறித்து மேலும் தகவல்களை பெறும் நோக்கில் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தி வருகின்றனர். ராஜா ரகுவன்ஷியின் மரணம் காதலும் சதியும் கலந்த பெரும் வழக்காக உருமாறியுள்ளது.