உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்தில் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 ஆண்டுக்கான போட்டியில் சீன நாட்டைச் சேர்ந்த நடப்பு உலக சாம்பியனான டிங் லென்னை வீழ்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார்.

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்தவர் குகேஷ். குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அதிகாரிகள் அதுல்யா மிஸ்ரா, மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து குகேஷை வரவேற்றனர். தமிழக அரசு சார்பில் சிறப்பு கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  குகேஷ் கூறியதாவது, சின்ன வயதில் இருந்து எனக்கு இது கனவு. எனக்கு தேவையான எல்லா உதவிகளையும் தமிழ்நாடு அரசு செஞ்சு கொடுத்தாங்க.  நானே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த வெற்றி கிடைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு குகேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.