உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் மீர்கஞ்ச் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது.  இந்தப் பெண் தற்போது தனது கணவர், மாமியார் மற்றும் தந்த்ரீகர் மீது பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

“குழந்தை இல்லாததால், கணவர் தன்னை தாந்திரீகரிடம் அழைத்துச் சென்று, போதை மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்” என பெண் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை மாமியாரிடம் கூறியபோது, அவரும் மைத்துனியும் தன்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றியதாக கூறியுள்ளார்.

பிலிபித்தைச் சேர்ந்த அந்தப் பெண், ஜூன் 2023ல் மீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டார். ஆரம்பத்தில் வாழ்க்கை சாதாரணமாக இருந்தாலும், குழந்தை இல்லாததால் கணவர் மற்றும் குடும்பத்தினரின் தொடர்ந்து அந்த பெண்ணை துன்புறுத்த ஆரம்பித்தனர்.

பின்னர் கணவர் அடிக்கத் தொடங்கினார், உடலுறவு குறித்து பலத்த கட்டாயம் நிகழ்ந்தது என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். 2025 ஏப்ரல் 12 அன்று, குழந்தை பெறுவதற்காக தாந்திரீகர் கிர்தாரியிடம் அழைத்துச் சென்ற கணவர், அங்கு தந்த்ரீகர் கூறியபடி வேறு ஆண்களுடன் உறவு கொள்ளும்படி அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணின் கூற்றுப்படி, தந்த்ரீகர் கொடுத்த மருந்தால் மயக்கமடைந்த நிலையில், இரண்டு ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சுயநினைவு திரும்பிய பிறகு இந்த செயலை உணர்ந்த அவர், குடும்பத்திடம் தெரிவித்தும்  பலனில்லை. இந்தப் பெண்ணை வீட்டிலிருந்து வெளியேற்றிறனர்.

இதனால் அவர், தாய் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறினார். பின்னர் மீர்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்ணின் புகாரின் பேரில், தந்த்ரீகர் கிர்தாரி உட்பட 6 பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை கைது செய்ய விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. “குற்றவாளிகள் தப்ப முடியாது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என போலீசார் உறுதியாக தெரிவித்துள்ளனர்.