சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி அமைந்துள்ளது. சமீபத்தில் அப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக அந்த ஏரியில் அதிக அளவு தண்ணீர் உள்ளது.

நேற்று ஏரியில் பெண்ணின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் தென்னம்பிள்ளையூரை சேர்ந்த சேகரின் மனைவி மீனாட்சி என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.