நாம் தமிழர் கட்சிக்கு யாரும் போட்டி இல்லை எங்களுக்கு நாங்கள் தான் போட்டி என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் சீமான் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய அவர், நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்தான். அதனை அப்போது திமுக ஆதரித்தது. சாராயம் குடித்து இறந்தால் அதிக அளவில் இழப்பீடு. நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரன் இறந்தால் சொற்ப இழப்பீடு. மொத்தத்தில் தமிழகத்தில் இருப்பது மோசமான ஆட்சி முறை என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.