தமிழக சுகாதாரத்துறை குரங்கம்மை பரவல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது குரங்கம்மை வேகமாக பரவி வருவதால் அந்த நோய் பாதித்தவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு குரங்கம்மை பாதிப்படைந்த நாடுகளுக்கு சென்று வந்தவர்களுக்கு 21 நாட்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அதன் பிறகு உடனடியாக அவர்கள் மருத்துவரையும் சந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை தனிமைப்படுத்தியும் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்ற வேண்டும். இது வைரஸ் தொற்று என்பதால் உடனடியாக அதற்குரிய சிகிச்சையை தொடங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் குரங்கமை வைரஸ் பாதிப்பு தொற்று உடன் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வந்தாலும் உடனடியாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.