
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஜோயல் லு ஸ்கௌர்னெக்(74). இவர் 1989 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவராகவும், தலைமை அறுவை சிகிச்சை நிபுணராகவும் வேலை பார்த்தார். இவர் பணியாற்றிய காலத்தில் அவரிடம் சிகிச்சைக்காக வந்த 15 வயதுக்கு உட்பட்ட சுமார் 246 சிறுமிக்கும் மேல் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் ஜோயல் லு ஸ்கௌர்னெக் -ஐ கடந்த 2010 ஆம் ஆண்டு கைது செய்தனர். 2010-ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 15 ஆண்டுகளாக ஜோயல் பாரிஸில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார். விசாரணையில் ஜோயல் மருத்துவராக பணிபுரிந்த காலத்தில் அவரிடம் சிகிச்சைக்காக சென்ற 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்தும், கட்டாயப்படுத்தியும் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான படங்களை பதிவிறக்கம் செய்ததற்காக ஜோயல் குற்றம் சாட்டப்பட்டார். பின்பு 2017 ஆம் ஆண்டு தனது பக்கத்து வீட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார். அதன்பின்பே ஜோயலின் உண்மை முகம் தெரியவந்தது. 2020 ஆம் ஆண்டு தனது இரண்டு மருமகள்கள் உட்பட நான்கு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.
தற்போது ஜோயலிடம் நடத்திய விசாரணை முடிவில் நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதுவரை அவர் 15 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்திருந்ததால் இன்னும் 5 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுவரை பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து 60க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.
அதில் ஒருவரான தாமஸ் என்பவர் ஜோயல் பற்றி கூறியதாவது, இதுவரை வாழ்ந்தவர்களிலேயே மிகவும் மோசமான குழந்தை பாலியல் குற்றவாளி ஜோயல். அவர் குழந்தை பாலியல் வன்கொடுமை அணுகுண்டு. அவரை பொதுமக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என கூறினார். இந்த வழக்கு பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.