
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இருவரும் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இன்று தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி பூம்புகாரில் பாமகவின் மகளிர் மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டிற்கு அன்புமணி உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
தன்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை என கூறினார். இதனையடுத்து ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு நிகழுமா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, உலகில் பல அதிசயங்கள் நடப்பதாகவும், அது எப்போது எப்படி நடைபெறும் என சொல்ல முடியாது என்று பதில் அளித்துள்ளார்.