
உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் 16ஆம் நூற்றாண்டில் லியானார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மர்மங்கள் நிறைந்த ஒரு ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் பல மர்மங்கள் ஒளிந்திருக்கும் நிலையில் தற்போது ஓவியம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ட்வீட்டிங் டா வின்சி என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆன் பிஸ்ஸோரோஸ்ஸோ என்பவர் மோனலிசா ஓவியத்தின் பின்னால் இருக்கும் நிலப்பரப்பு குறித்த கேள்விக்கு பதிலை கண்டுபிடித்துள்ளார்.
அதன்படி மோனலிசா ஓவியத்தின் பின்னால் இருக்கும் நிலப்பரப்பு இத்தாலியின் லோம்பார்டி பகுதியில் உள்ள கோமோ ஏரி கரையின் லெக்கோ நகரின் சில பகுதிகளாகும். அந்த ஓவியத்தில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட Lecco’s Azzone Visconit என்று பாலத்தின் புகைப்படம் உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த புகழ்பெற்ற மோனலிசா ஓவியமானது தற்போது பாரிஸ் நகரத்தில் உள்ள லோவுர் அருங்காட்சியகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.