சீனாவின் யாங்சோ (Yangzhou) நகரில் 8 வயது சிறுமி ஒருவர், தொடர்ச்சியாக உயிருடன் உள்ள சிறிய பூச்சிகளை வாந்தியெடுத்த வந்த சம்பவம் மருத்தவர்களையும், பெற்றோர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருமாதத்திற்கு மேல், அந்த சிறுமி தினமும் சுமார் 1 செ.மீ நீளமுள்ள பூச்சிகளை வாந்தி எடுத்து வந்ததாக South China Morning Post செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ச்சியான பரிசோதனைகளுக்கும் பிறகு கூட, காரணம் தெரியாமல் குழம்பிய மருத்தவர்கள், சிறுமியின் உடல்நிலை ஏன் இப்படியான எதிர்வினையை காட்டுகிறது என்று புரியாமல் தவித்தனர். அதே நேரத்தில், குடும்பத்தில் உள்ள மற்ற யாருக்கும் இதுபோன்று எந்த அறிகுறியும் காணப்படவில்லை. இதனால் இந்த நிலைமை இன்னும் சிக்கலானதாக மாறியது.

அறிகுறிகளைத் தீவிரமாக கவனித்த டாக்டர் Zhang Bingbing (Children’s Hospital of Soochow University), அந்த வாந்தியில் உள்ள பூச்சிகளை மாவட்ட நோய் தடுப்பு மையமான CDC-க்கு அனுப்பி பரிசோதிக்க ஆலோசனை வழங்கினார். பரிசோதனை செய்த Yangzhou CDC நிபுணர்கள், அவை “drain fly larvae” (ஈரப் பகுதிகளில் வளரக்கூடிய சிறிய ஈக்களின் குழந்தைகள்) என்று உறுதி செய்தனர். இவை பொதுவாக கழிப்பறை, சமையலறை போன்ற ஈரமான இடங்களில் வளரும் பூச்சிகள்.

மேலும், சிறுமி வசிக்கும் வீட்டின் அடித்தளத்தில் உள்ள நீர்நிலைகள் தீவிரமாக அழுக்கடைந்துள்ளன என்பதும், அந்த நீர் பல் தேய்க்கும்போது அல்லது கழிப்பறையைப் பயன்படுத்தும்போது வாயில் சென்றிருக்க வாய்ப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பூச்சிகள் நேரடியாக நோய்களை பரப்பாமல் இருந்தாலும், அவற்றின் லார்வாக்கள் பல பாக்டீரியாக்களை தாங்கி இருக்கும் என்பதால், சீரிய தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு நிபுணர்கள், கைகளை சுத்தமாக வைத்தல், கழிப்பறை மற்றும் சமையலறைகளை வறண்டும் சுத்தமாகவும் வைத்திருத்தல் அவசியம் என்றும், டிரெயின்களில் கொதிக்கும் நீர், உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை ஊற்றுவதன் மூலம் இப்பூச்சிகளை அழிக்கலாம் என அறிவுறுத்தினர். வன்கொடுமையான தொற்றுநோய்கள், தாமதமாக கண்டறியப்பட்டால் உயிரிழப்புக்கும் வழிவகுக்கும் என்பதால், இம்மாதிரியான நிகழ்வுகளை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், சுகாதாரத்தை புறக்கணிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்படுகிறது.