புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே புது நகரை சேர்ந்தவர் கணேசன்(85). இவர் விவசாயம் பார்த்து வந்தார். நேற்று காலை கணேசன் மாத்திரம்பட்டியில் உள்ள தரைமட்ட கிணற்றுக்கு அருகே மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மதியம் கணேசனின் மருமகள் லட்சுமி தனது 8 வயது மகன் கோபாலுடன் அங்கு சென்றுள்ளார்.

அப்போது கிணற்றுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த கோபால் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்தான். இதனை பார்த்து அதிர்ச்சசியடைந்த கணேசன் தனது பேரனை காப்பாற்றுவதற்காக கிணற்றில் இறங்கினார்.

சிறிது நேரத்தில் அவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாத்தா, பேரன் ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.