பீகார் மாநிலத்தில் திருமணம் ஆன ஒரு பெண் தன்னுடைய 4 குழந்தைகளுடன் கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அகரகோலா பகுதியில் சந்தோஷ் பிரஜாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் ஆக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது மனைவி விகாஷ் குமார் (எ) அதும் திவாரி என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அதுல் திவாரி தற்போது செல்போன் மூலம் சந்தோஷூக்கு தொடர்புகொண்டு உன் மனைவி என்னை திருமணம் செய்து கொல்லப் போகிறார். குழந்தைகளையும் அழைத்து வந்துவிட்டார். நீ போலீசில் இதைப் பற்றி புகார் செய்தால் உன்னை நாங்கள் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிள்ளார்.

உடனடியாக தன்னுடைய மாமியார் வீட்டிற்கு சந்தோஷ் சென்றபோது அங்கு வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பொருட்கள் எதுவும் இல்லாதது தெரிய வந்தது.

உடனடியாக சந்தோஷ் விகாஸ் குமாருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து அவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் கள்ள காதலனை தேடி வருகின்றனர்.

தன்னுடைய மனைவியின் முடிவால் சந்தோஷ் மிகவும் மன வேதனையில் இருக்கிறார். மேலும் கள்ளக்காதலனுடன் வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் குழந்தைகளோடு பெண் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.