
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாவக்கரை பகுதியில் ரூபன் (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் ஓட்டுனராக இருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு 20 வயது பெண்ணுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழகினார். இந்த பெண் தண்டாரம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த பெண்ணுக்கு ரூபன் காதல் வலை விரித்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பழகி வந்தார். இந்நிலையில் ரூபன் அந்த இளம் பெண்ணிடம் உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதை நம்பி அந்த பெண்ணும் கடந்த 7-ம் தேதி ரூபன் அழைத்து இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது தனியாக பேசலாம் என்று கூறி ரூபன் அந்த பெண்ணை ஒரு இடத்திற்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு அவருடைய நண்பரான தனுஷ் (20) என்பவர் இருந்துள்ளார். அதாவது அவர்கள் இருவரும் ஏற்கனவே திட்டமிட்டு அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தனியாக அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் அந்த பெண்ணை சுடுகாட்டில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் ரூபன், தனுஷ் ஆகியோரை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.