மழை வேகமாக பெய்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு நபர் வெளியில் ஒரு மேசையில் அமர்ந்து, தட்டில் வைத்திருக்கும் உணவை நனைந்தபடியே சாப்பிடுகிறார். தண்ணீர் தட்டில் விழுந்தாலும், அவர் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. இந்த சம்பவம்  தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ @irfan__shaikh_143 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. செய்தி வெளியாகும் நேரத்தில், இந்த வீடியோக்கு 86,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். வீடியோ எங்கு எப்போது எடுத்தது என்பது தெரியவில்லை என்றாலும், காட்சி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Irfan Shaikh (@irfan__shaikh_143)

இந்த வீடியோவைப் பார்த்த பின் பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர். ஒருவர், “தந்தை ரொட்டியை எப்படி சம்பாதிக்கிறார் என்பதை அவருக்குத் தெரியும்” என எழுத, மற்றொருவர், “இவர் ஒரு விவசாயியின் மகனாக இருக்க வேண்டும்” என்றார்.

“இரண்டு ரொட்டியின் மதிப்பு இவருக்கு தெரியும்”, “சாப்பிடுங்கள் சகோதரரே… உணவு அதிர்ஷ்டத்தால் கிடைக்கிறது” போன்ற கருத்துகள் இந்த நபரின் நிலையை உணர்த்துகின்றன. மேலும்  இந்த வீடியோ உணவுக்கான மரியாதையை நினைவுபடுத்துவதோடு, வாழ்க்கையின் எளிமை, நம்பிக்கையை உணர்த்தும் ஒரு பாடமாக மாறியுள்ளது.