
உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் என்பவருக்கும், சந்த் கபீரை சேர்ந்த ஜோதா என்ற பெண்ணுக்கும் 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன நாளிலிருந்து ஜோதா தனது கணவரை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு உடல் ரீதியான உறவோ, திருமண வாழ்க்கையோ இல்லாமல் தொடர்ந்து சண்டைகள் உருவாகி வந்த நிலையில், ஜோதா அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த நவம்பரில் தாய் வீட்டுக்குச் சென்ற ஜோதா, ஏப்ரல் மாதம் வீடு திரும்பியதிலிருந்து வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் ஜோதாவை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே மருத்துவ பரிசோதனையில் ஜோதா 14 வார கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், இது எப்படி சாத்தியம் என நம்ப முடியாமல், மேலும் சில மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்து உறுதி செய்துள்ளார்.
உடல் தொடர்பே இல்லாத நிலையில், மனைவியின் கர்ப்பம் குறித்து குழம்பிய பிரதாப், மனைவியிடம் கேட்டபோது, “வேறு ஒருவரால் தான் கர்ப்பம் வந்தது, என்ன பண்ண முடியும்?” என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
என்னையும், குழந்தையையும் ஏற்று கொள். இல்லையென்றால் வரதட்சணை புகார் கொடுப்பேன் என மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதாப் மஹராஜ்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.