ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே கடந்த 2022 ஆம் வருடம் மார்ச் மாதம் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டது. அவருடைய மரணத்திற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்தார்கள். இந்த நிலையில் அவருடைய மரணம் குறித்த தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இறந்த பிறகு அவர் பக்கத்தில் இருந்த போதை பொருளை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக வழக்கு விசாரணையில் ஈடுபட்ட ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார் . மேலும் அவர் உயிரிழந்த போது அவருடைய உடல் அருகே ஒரு போதைப் பொருள் இருந்தது. அது உடலுறவு மேற்கொள்வதற்காக பயன்படுத்தும் போதை பொருள்.

இதயம் பலவிதமாக உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது.  மேலும் அவர் உடலுக்கு பக்கத்தில் சற்று வாந்தி  எடுத்ததற்கான அடையாளமும், ரத்தமும் இருந்தது .அவர் மரணத்திற்கு பின்னால் இந்த போதைப்பொருள் கூட இருக்கலாம்.  எங்கள் மேலதிகாரி அந்த போதைப் பொருளை எடுக்குமாறு கூறிவிட்டார். கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட வீரருக்கு இப்படி ஒரு மரணம் நிகழ்ந்ததாக வெளியாகும் செய்தி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு பிடிக்கவில்லை. ஆகவே அவர்களும் இதற்குப் பின்னால் இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.