
சேலம் மாவட்டம் சின்னபிள்ளையூர் பகுதி சேர்ந்தவர் சின்ன பிள்ளை. இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். 74 வயதான சின்ன பிள்ளைக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 20-ஆம் தேதி சின்ன பிள்ளை தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்ற மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
சின்னப் பிள்ளையின் மகள் வழி பேரன் பிரகாஷ்(31) என்பவர் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி பிரகாஷ் தனது பாட்டியிடம் 2000 ரூபாய் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.
இதனையடுத்து பாட்டியிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்துள்ளார். பின்னர் மனைவியின் ஊரான பெரியேரிப்பட்டி பகுதியில் இருந்த போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர். போலீசார் பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.