விருதுநகர் மாவட்டம் திரு விருந்தால்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதியினருக்கு ஜெயதுர்கா(10), ஜெயலட்சுமி(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இன்று சுந்தரவேலுக்கும் அவரது மனைவி பூங்கொடிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சுந்தரவேல் தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி சரணடைந்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பூங்கொடி, ஜெய துர்கா, ஜெயலட்சுமி ஆகிய 3 பேரும் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுந்தரவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.