
மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள ராட்லாம் பகுதியில் ஒரு 35 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் மற்றும் 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார்கள். இதில் அந்த 35 வயது பெண் கடந்த ஒரு வருடங்களாக ஒரு பத்தாம் வகுப்பு மாணவனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். தொடர்ந்து அவர் அந்த மாணவனை வற்புறுத்தி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய வீட்டிற்கும் அந்த மாணவனை அழைத்து அந்தப் பெண் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார்.
இதனால் மாணவன் தன் தந்தையிடம் நடந்த விபரங்களை கூறவே அவர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசில் புகார் கொடுத்தனர். அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமானது தெரியவந்த நிலையில் தற்போது மூன்றாவது ஆக சிறுவனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார் என்பதும் தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் அந்த பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.