
ஐபிஎல் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில் சென்னை அணியின் கேப்டனாக ருத்துராஜ் செயல்பட்டாலும் அணிக்கான முடிவுகளை தோனி எடுப்பதாகவே பேசப்பட்டு வந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கான முடிவுகளை ருத்துராஜ் பின்னணியில் இருந்து தான் எடுப்பதாக கூறப்படுவதை தோனி மறுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ருத்துராஜும் இணைந்து பல வருடங்களாக பயணிக்கிறார். அவர் மிகவும் அமைதியானவர். அவரிடம் சிறந்த தலைமை பண்பு உள்ளது. அதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக தேர்வு செய்யப்படுவதற்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.
கேப்டனாக அவர் தொடர ஆரம்பிப்பதற்கு முன்பாக அவரிடம் கூறியது என்னவென்றால் நான் ஒரு அறிவுரை கூறினால் அதை கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து வெளியே இருப்பேன் என்று சொன்னேன். 99% முடிவுகளை எடுத்தது அவர்தான். பந்துவீச்சு மாற்றங்கள், பீல்டிங்கில் மாற்றங்கள் போன்ற மிக முக்கியமான முடிவுகளை அவர்தான் எடுத்தார். அவருக்கு நான் உதவியாக இருந்தேன். அவர் வீரர்களை மிக அருமையாக கையாண்டார் என்று கூறியுள்ளார்.