சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத வகையில் மழை பெய்ததால் பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். வெள்ள தடுப்பு பணிகளுக்கு செலவிட்ட நான்காயிரம் கோடி பணம் என்ன ஆனது என்று இபிஎஸ் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள கனிமொழி, அதிமுக செய்த தவறை சரி செய்யவே இந்த பணம் செலவாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.