தமிழகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை இந்த முகாமை நடத்தவும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஆண்டின் தொடக்கத்திலேயே ஓராண்டுக்கான அட்டவணையை ஆட்சியர் தயார் செய்யவும் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.