
பிரபல கிரிக்கெட் வீரரான அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி கூறியதாவது, கிரிக்கெட்டில் வீரர்கள் விளையாடிய சிறப்பான ஷாட்களை வைத்து அவர்களை நினைவு கூறுவார்கள். ஆனால் அதிலும் நீங்கள் தனித்துவமானவர்.
2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மறக்க முடியாத போட்டியில் கடைசி பந்து WIDE ஆக வாய்ப்புள்ளது என தெரிந்து நீங்கள் அதை விளையாடாமல் விட்டது எப்போதும் நினைவில் இருக்கும். அந்த நொடிப் பொழுதில் பந்தை அடிக்காமல் விட்டது உங்களுடைய சமயோசித புத்தி கூர்மையை காட்டுகிறது என ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.