முன்னணி நடிகையான திரிஷா ராங்கி திரைப்படத்தில் நிரூபராக நடித்து சண்டை காட்சிகளில் தெறிக்கவிட்டார். முருகதாஸ் கதையில், இயக்குனர் சரவணன் இயக்கிய திரைப்படம்தான் “ராங்கி” ஆகும். இவற்றில் திரிஷா நிரூபராக நடித்து இருந்தார். ஹீரோயின் திரைப்படம் என பார்க்காமல் லிபியா, உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் சூட்டிங் நடந்தது.

இந்நிலையில் தொடர்ந்து என்னை நல்ல கதைகளில், நல்ல கேரக்டர்களில் நடிக்க வைத்த மணிரத்தினம், கவுதம்மேனன், பிரேம், சரவணன் அனைவருக்கும் திரிஷா நன்றி தெரிவித்துள்ளார். மேலும் திரிஷா கூறியதாவது, புது இயக்குனர்கள் நல்லா கதை பண்றாங்க. அவர்கள் இயக்கத்தில் நான் நடிக்க விரும்புகிறேன். படம் முழுவதும் ரஜினியுடன் நடிப்பது என் ஆசை” என்று அவர் கூறினார்.