ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுத்த நிலையில் 2 வருடங்களாகியும் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவி மற்றும் பொருளாதார ரீதியாக உதவி செய்து வருகிறது. இந்தப் போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பலருக்கு ரஷ்யா கைது வாரண்ட் பிறப்பித்து வருகிறது. அதன்படி சர்வதேச நீதிமன்றத்தின் வக்கீலுக்கும் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தற்போது உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்யா தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது.

அதன்படி இனி அவர் ரஷ்யாவுக்குள் நுழைந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார். இதேபோன்று உக்ரைன் முன்னால் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ, தரைப்படைத் தளபதி ஒலெக்சாண்டர் பாவ்லியுக், எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாஸ் ஆகியோரையும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. ஆனால் இது பயனற்ற அறிவிப்பு என உக்ரைன் தெரிவித்துள்ளதோடு , நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட் மட்டுமே உண்மையானது என்றும் தெரிவித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட் 123 நாடுகளில் செயல்படக்கூடியது. மேலும் ஏற்கனவே சர்வதேச நீதிமன்றத்தால் ரஷ்ய அதிபர் புதின் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.