பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்திற்கு வருடம் தோறும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள். கடந்த வருடம் மட்டும் 62 லட்சம் சுற்றுலா பயணிகள் இந்த ஈபிள் கோபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து பார்வையாளர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இது குறித்து ஈபிள் கோபுரம் பராமரிப்பு அதிகாரி கூறுகையில் “வெடிகுண்டு இருக்கிறதா என ஈபிள் கோபுரத்தில் சோதனை நடத்தினர். இது போன்ற சோதனைகள் வழக்கமாக இங்கு நடைபெறும். இந்த திடீர் வெடிகுண்டு மிரட்டலால் ஈபிள் கோபுரத்தின் மூன்று தலங்களில் இருந்த பார்வையாளர்களும் விரைந்து வெளியேற்றப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.