
நாட்டில் பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மக்கள் பலர் ஆன்லைன் வாயிலாக அதிக பொருட்கள் வாங்குவதற்கு துவங்கிவிட்டனர். ஆன்லைன் வாயிலாக பொருள்கள் வாங்கினால் சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கையில் மக்கள் கேஷ் ஆன் டெலிவரி ஆப்ஷனை விரும்புகிறார்கள். இதன் காரணமாக பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அதாவது இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாயிலாக பொருட்கள் வாங்கையில் கேஷ் ஆன் டெலிவரிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் இதுபற்றி டெல்லி உயர்நீதிமன்றம் புது உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாயிலாக பொருட்கள் வாங்கையில் கேஷ் ஆன் டெலிவரிக்கு தடைவிதிப்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.