வேலூர் மத்திய சிறையில் இஸ்லாமிய சிறை கைதிகள் வழிபட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறைச்சாலைகள் என்பது தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடம் மட்டுமல்ல அவர்களை வழிநடத்தும் இடங்களாகும்.

கடந்த 29 மாத விடியா திமுக ஆட்சியில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக செய்திகள் வருகின்றது. கொரோனா காலத்தில் மூடப்பட்ட மசூதிகளை மட்டும் திறக்காமல் மூடி வைத்துள்ளனர். சிறைச்சாலைகளில் மசூதிகளை திறக்க வழிவகை செய்ய வேண்டும் என்று இபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.