
இந்திய விண்வெளி ஆராய்ச்சியை நிறுவனமான இஸ்ரோ இந்தியாவின் முதன்மையான விண்வெளி சார்ந்த செயல்பாடுகள், ஆய்வுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்புடைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு உதவி வரும் விண்வெளி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அதாவது பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தில் யுவிகா என்ற திட்டத்தை இஸ்ரோ கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் தலா மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இஸ்ரோ மையங்களின் பல்வேறு செயல்முறை விளக்க பயிற்சிகள் வழங்கப்படும். அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் வருகின்ற மே மாதம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான விண்ணப்ப அவகாசம் பிப்ரவரி 24 முதல் மார்ச் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களின் இறுதி பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனவும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு திருவனந்தபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா உட்பட இஸ்ரோவின் 7 ஆய்வு மையங்களில் பயிற்சி வழங்கப்படும் என இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இறுதியாக பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பங்கேற்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.