
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் உண்மையான ஹீரோக்கள் மைதானத்தை பராமரித்தவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தான் என்று BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு அதிகபட்சம் 25 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமீபத்திய டி20 தொடரின் உண்மையான கதாநாயகர்கள் அயராது உழைத்த மைதான பராமரிப்பாளர்கள் தான்.
அவர்கள் தான் கடினமான வானிலையின் போதும் தலைசிறந்த பிட்ச்களை உருவாக்குவதில் சிறப்பாக ஈடுபட்டார்கள். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பத்து ஐபிஎல் மைதானங்களில் பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு 25 லட்சமும், கூடுதலாக மூன்று மைதானங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 லட்சம் வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.