தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. சென்னையில் இன்று மூன்றாம் கட்ட கல்வி விருது விழா நடைபெறும் நிலையில் விஜய் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.

விபத்து நடந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும்போது மனது பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை இது என்று கூறினார். பின்னர் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய விஜய், என்னை இளைய காமராஜர் என்று யாரும் அழைக்க வேண்டாம். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மேடையில் பேசுவதை குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். யாரும் அரசியல் பற்றி பேச வேண்டாம். நீங்கள் அதற்கு பதிலாக உங்களுடைய பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பற்றி பேசுங்கள் என்றார்.

அதாவது முன்னதாக வால்பாறையை சேர்ந்த மாணவன் கார்த்திக்குக்கு நடிகர் விஜய் தங்க மோதிரம் பரிசாக வழங்கினார். அப்போது மாணவனின் தந்தை மேடையில் பேசும்போது விஜயகாந்த் மற்றும் எம்ஜிஆர் ஆகியோரை குறிப்பிட்டு நடிகர் விஜய்யை புகழ்ந்து பேசினார். இதனால் நடிகர் விஜய் அவரிடம் இருந்து மைக்கை வாங்கி என்னை இளைய காமராஜர் என்று யாரும் அழைக்க வேண்டாம்.

அரசியல் பற்றி பேசுவதற்கு பதிலாக உங்களுடைய பள்ளி பற்றியும் ஆசிரியர்கள் பற்றியும் பெற்றோர்கள் பற்றியும் பேசுங்கள் என கோரிக்கை விடுத்தார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என விஜய் அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.