தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதே போல், மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான இந்த மாத தவணை தொகை 5 நாட்கள் முன்கூட்டியே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிகளில் இந்த தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. பல பயனாளிகளுக்கு இது தொடர்பாக நேற்று முதலே குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.