உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் சோஹன் லால் திவேதி என்ற 32 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நீலம் என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் பீகாரின் காயா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதில் நீலம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய 3 மகள்களுடன் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி சோஹல் இறந்துவிட்டதாக திடீரென நீலத்திற்கு தகவல் வந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தன்னுடைய சகோதரர் பிரதிப்புடன் ஏப்ரல் 10-ம் தேதி வீட்டிற்கு வந்தார். அவருக்கு இறுதி சடங்குகள் நடந்த போது திடீரென தன்னுடைய கணவரின் தலையில் இருந்து ரத்தம் ஒழுகுவதை நீலம் பார்த்தார். இதனால் மரணத்தில் சந்தேகம் அடைந்து தன்னுடைய கணவரின் உடலை பார்த்தபோது கடுமையான காயங்கள் இருப்பது தெரிய வந்தது.

இதை அவர் குடும்பத்தினரிடம் கூறிய நிலையில் அவர்கள் சடலத்தை எடுத்து செல்வதில் மட்டும்தான் தீவிரம் காட்டினார். உடனடியாக நீலம் மற்றும் அவருடைய உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சோகனின் சகோதரர் மயானத்தில் வைத்து தீ வைத்தார். ஆனால் விரைந்து வந்த போலீஸ் எரிந்த சடலத்தை உடனடியாக அனைத்து பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதேபோன்று கடந்த வருடம் ஒரு 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தேகமான முறையில் இறந்த நிலையில் எரிந்து கொண்டிருந்த அவனது சடலத்தை போலீசார் அனைத்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் ‌