ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜகாடியா தொழிற்சாலை பகுதியில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் பஸ்வான் என்பவர் சிறுமியை புதருக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு சிறுமியின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் சிறுமி படுகாயமடைந்து வலியில் அலறி துடித்தார். அதனை பார்த்தவுடன் விஜய் பஸ்வான் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் ரத்த வெள்ளத்தில் தனது மகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக தனது மகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது இதே சிறுமியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக விஜய் கூறியுள்ளார். விஜய் பஸ்வானின் அந்த சிறுமியின் தந்தையும் ஒரே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். விஜய்க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.