சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியை பார்க்க தோனியின் பெற்றோர் வருகை தந்திருந்தார்கள். இதுவரை ஐபிஎல் தொடங்கியதில் இருந்து இதுவரை அவர்கள் சேப்பாக்கத்தில் வந்து பார்த்ததே கிடையாது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் வந்ததால் தோனி தன்னுடைய ஓய்வு அறிவிக்கப் போகிறார் என்று வதந்திகள் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பாட்காஸ்டில் இது குறித்து கேள்விக்கு பதில் அளித்த தோனி, ” இல்லை இப்போதைக்கு இல்லை. நான் இன்னும் ஐபிஎல் விளையாடுகிறேன். நான் அதை மிகவும் எளிமையாக எடுத்துக் கொள்கிறேன்.

நான் அதை ஒரு வருடத்திற்கு ஒருமுறை செய்கிறேன். எனக்கு 43 வயது ஐபிஎல் 2025 முடிவதற்குள் எனக்கு 44 வயது ஆகியிருக்கும். எனவே அதன் பிறகு தான் விளையாடுவதா? இல்லையா? என்பதை முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் இருக்கிறது. ஆனால் முடிவு செய்வது நான் அல்ல. என்னுடைய உடல் தான் முடிவு செய்கிறது. எனவே இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதன்பிறகு பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.