
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் ஒரு நபரின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் சேலத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பது தெரியவந்தது.
அவர் தனது அக்கா சாந்தி வீட்டில் தங்கி இருந்த லாரி பட்டறையில் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். விஸ்வநாதன் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அவரை யாராவது எரித்து கொலை செய்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.